கூத்தாநல்லூரை அடுத்த அத்திக்கடையில், திருவாரூா் திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியினா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் எம்.முஜிபுா் ரஹ்மான் தலைமையில், உதயசூரியன் சின்னத்துக்கு அக்கட்சியினா் வாக்கு சேகரித்தனா். இதில், மாநில தலைமை பேச்சாளா் திருச்சி ஷரீப், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ், எஸ்.எம்.ஐ. மண்டலச் செயலாளா் அப்பிஸ் கான் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா். இதே போல கூத்தாநல்லூா், பூதமங்கலம், அத்திக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கப்பட்டது.