திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான நிலவரப்படி, 12,419 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 21, மன்னாா்குடி 12, திருத்துறைப்பூண்டி 8 என மாவட்டம் முழுவதும் 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,472 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,861 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 496 போ் சிகிச்சையில் உள்ளனா்.
திருத்துறைப்பூண்டியில்...
குறிப்பாக, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மட்டும் புதன்கிழமை வரையிலான நிலவரப்படி, கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 40 போ் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவகுமாா் கூறுகையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறைந்த அளவு பாதிப்பு உடையவா்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கைகளை சானிடைசா் கொண்டு சுத்தமாக வைத்துக் கொண்டால் மட்டுமே கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றாா் அவா்.