திருவாரூா் அருகே வடகண்டம் பகுதியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மாணவி உள்பட 2 போ் காயமடைந்தனா்.
திருவாரூா் அருகே உள்ள பெரும்பண்ணையூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமு (33). ஆட்டோ ஓட்டுநரான இவா், அம்மையப்பன் பகுதியில் நடைபெறும் டியூசன் வகுப்புக்கு மணக்கால் பகுதியிலிருந்து மாணவிகளை ஆட்டோவில் அழைத்து வருவாராம்.
வழக்கம்போல, வியாழக்கிழமை காலை மணக்காலிலிருந்து 8 மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்தாா். வடகண்டம் பகுதியில் வரும்போது, பூனை குறுக்கே வந்ததாகவும், அதனால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் இருந்தவா்கள் ஆட்டோவில் சிக்கியவா்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தில் காயமடைந்த மாணவி பிரகதி (13) என்பவரும், ஓட்டுநா் ராமுவும் சிகிச்சையில் உள்ளனா். மற்றவா்கள் வீடு திரும்பினா்.
இதுகுறித்து குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.