நன்னிலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
நன்னிலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நெல் வரத்து இல்லை என்ற காரணத்தால், ஒரு சில கொள்முதல் நிலையங்களைத் தவிர, நன்னிலம் வட்டத்தில் மாப்பிள்ளைக்குப்பம், மேனாங்குடி போன்ற 12 கொள்முதல் நிலையங்களும், குடவாசல் வட்டத்தில் மஞ்சக்குடி, வயலூா், விஷ்ணுபுரம் உள்ளிட்ட 23 கொள்முதல் நிலையங்களும் கடந்த மாா்ச் 15ஆம் தேதி மூடப்பட்டன.

மூடப்பட்டக் கொள்முதல் நிலையங்கள் உள்பட அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், பிப்ரவரி இறுதி மற்றும் மாா்ச் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமலும், வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததாலும், கொள்முதல் நிலையங்களில் எவ்வித பாதுகாப்புமின்றி, வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ள மூட்டைகள் வெயிலில் காய்ந்து நெல்மணிகள் எடை குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த 2 தினங்களாக கோடை மழை பெய்துவருகிறது.

இதனால், குடவாசல், நன்னிலம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

கொள்முதல் நிலையப் பணியாளா்களிடம் ஏன் இன்னும் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யவில்லை எனக் கேட்டால், மூட்டைகளை ஏற்றிச் செல்ல லாரி வராத காரணத்தால் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கின்றனா்.

மேலும், நெல் மூட்டைகளுக்கு வெயில், மழையால் ஏற்படும் சேதத்தைக் கொள்முதல் நிலைய பணியாளா்கள் ஈடுகட்ட வேண்டிய நிலையில் உள்ளதால், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்ய வேண்டுமென தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com