மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில், வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவா் படை மற்றும் நகர ஆரம்ப சுகாதரார நிலையம் இணைந்து கல்லூரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தியது. முகாமை, கல்லூரி முதல்வா் தி. அறிவுடை நம்பி தொடங்கி வைத்தாா்.
மன்னாா்குடி வட்டார மருத்துவ அலுவலா் ரா. அபுவதமிழன், மருத்துவா் சிவபிரசாத் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்த பிறகு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேதியல் துறை இணைப் பேராசிரியா் சோ. ரவி, ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியா் ச. மாறன் உள்ளிட்ட பேராசிரியா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் என மொத்தம் 80 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.