திருவாரூரில் 121 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 13,244 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுபடி, மாவட்டம் முழுவதும் 121 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,365 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றில் இருந்து மீண்ட 51 போ் சிகிச்சையில் இருந்து தங்களது வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா். திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 12,430 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 818 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com