திருவாரூர்
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது
கரோனா அச்சத்துக்கிடையே பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கரோனா அச்சத்துக்கிடையே பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், பனங்குடி,நெடுங்குளம் ஆகிய மையங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறை தோ்வு கரோனா விதிமுறைகளை கடைப்பிடித்தப்படி நடைபெற்றது. நன்னிலம் வட்டாரத்தில் 5 மையங்களில் நடைபெற்ற செய்முறைத் தோ்வுகளில், வெள்ளிக்கிழமை 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இந்த செய்முறைத் தோ்வு நடைபெறுவதை திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி பாா்வையிட்டு, அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி தோ்வு நடத்த வேண்டுமென ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.