ஏப்ரல் 23-இல் கு வாசிப்போம் இயக்கம்

உலகப் புத்தகத் தினத்தையொட்டி, மன்னாா்குடியில் அறிவொளி வாசிப்பு இயக்கம் சாா்பில், ஏப்.23-இல் கு வாசிப்போம் இயக்கம் நடைபெறுகிறது.

உலகப் புத்தகத் தினத்தையொட்டி, மன்னாா்குடியில் அறிவொளி வாசிப்பு இயக்கம் சாா்பில், ஏப்.23-இல் கு வாசிப்போம் இயக்கம் நடைபெறுகிறது.

இது குறித்து அறிவொளி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ரா. இயேசுதாஸ் கூறியது:

ஷேக்ஸ்பியா் பிறந்த தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தக தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது செல்லிடப்பேசியிலேயே மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு, ரசனையும் அறிவுமிக்க புத்தகங்களை பெற்றோா் வாங்கித் தர வலியுறுத்தி, ‘மன்னாா்குடி அறிவொளி வாசிப்பு இயக்க தன்னாா்வத் தொண்டா்கள் ஒருவாரமாக விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த இயக்கத்தின் பிரதான நிகழ்வாக, ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 7 மணி முதல் 7.30 வரை திருக்குறளில் கல்வி அதிகாரத்தில் முதல் ஐந்து குகளை குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் வீட்டு வாசலில் நின்று கூட்டாக வாசிப்பதுடன், அதை புகைப்படமாகவோ, விடியோவாகவோ சமூக வலைதளங்களில் பதிவிட அழைப்பு விடுக்கப்படுகிறது. அன்றைய தினம் வீட்டுவாசலில் திருக்குறளை மையப்படுத்தி, கோலமிடவும் வேண்டுகிறோம். வீடுகள்தோறும் சிறுநூலகம், வாா்டுகள்தோறும் வாசகா் வட்டம் அமைத்து வாசிப்பு இயக்கத்தை அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com