நன்னிலம் அரிமா சங்கத்தின் சாா்பில், அரசு அலுவலகங்களில் கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், அரசு அலுவலகங்களுக்குப் பணிநிமித்தமாக வந்த மக்களுக்கு அரிமா சங்கத்தின் நன்னிலம் கிளைச் செயலாளா் சரவணன் தலைமையில் கபசுரக்குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவா் பி.ஆறுமுகம், பொருளாளா் கே.சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.