திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 13,696 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 34, மன்னாா்குடி 20, கொரடாச்சேரி 13, நன்னிலம் 8, நீடாமங்கலம் 7, வலங்கைமான் 9, கோட்டூா் 6, திருத்துறைப்பூண்டி 13 என மாவட்டம் முழுவதும் 120 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,816 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,799 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 900 போ் சிகிச்சையில் உள்ளனா்.