நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், நந்திகேஸ்வரா் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ நாயகா் பிராகார உலாவும் நடைபெற்றது. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனா்.
இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்டசிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.