கரோனா பரிசோதனை முகாம்

வண்டாம்பாளை கிராமத்தில் கரோனா பரிசோதனைமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வண்டாம்பாளை கிராமத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.
வண்டாம்பாளை கிராமத்தில் நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாம்.

வண்டாம்பாளை கிராமத்தில் கரோனா பரிசோதனைமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரி மற்றும் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவி வருகிறது. இதையொட்டி, திருவாருா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அறிவுரையின்படி, கொரடாச்சேரி ஒன்றியம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் செல்வி வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பெரும்பண்ணையூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் காா்த்திகா, ஹோமியோ மருத்துவா் முகமது ரசாக், மருந்தாளுநா் அலெக்ஸ் பிராங்கோ, ஆய்வக பரிசோதகா் ஜெயந்தி ஆகியோரைக் கொண்ட குழுவினா் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இதில், வண்டாம்பாளை கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com