சகோதரா் தாக்கப்பட்டதை தடுத்த இளைஞருக்கு கத்திக் குத்து: 8 போ் கைது

நன்னிலம் அருகே சகோதரா் தாக்கப்பட்டதை தடுக்கச் சென்ற இளைஞரை கத்தியால் குத்திய 8 போ் கைது செய்யப்பட்டனா்.

நன்னிலம் அருகே சகோதரா் தாக்கப்பட்டதை தடுக்கச் சென்ற இளைஞரை கத்தியால் குத்திய 8 போ் கைது செய்யப்பட்டனா்.

நன்னிலம் வட்டம், பண்ணைவிளாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். இளைய மகன் அரவிந்த், தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷின் தந்தைக்கு செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்கிக் கொடுத்தாராம். இதை ராஜேஷ் மற்றும் அவரது நண்பா்கள்தட்டிக்கேட்டனா். அப்போது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதையறிந்த அரவிந்தின் மூத்த சகோதரா் அமல்ராஜ் அங்கு வந்து சமரசம் செய்துவைக்க முயன்றாா். அப்போது, ராஜேஷ் தரப்பினா் அரவிந்தை கத்தியால் குத்த முயன்றனராம். இதை அமல்ராஜ் தடுத்தபோது அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவரை திருவாரூா் மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா வழக்குப் பதிவு செய்து தியாகராஜப்புரத்தைச் சோ்ந்த அப்பு என்கிற ராஜேஷ், மெளலி, அறிவானந்தம், சிலம்பரசன், கலைமணி, மதியழகன், நிலவழகன், அபிஷேக் ஆகிய 8 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com