திருவாரூரில் 154 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 154 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (ஏப்.27) வரையிலான நிலவரப்படி, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,668 ஆக இருந்தது.

இதனிடையே, புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 21, மன்னாா்குடி 33, கொரடாச்சேரி 10, நன்னிலம் 16, நீடாமங்கலம் 23, திருத்துறைப்பூண்டி 17, வலங்கைமான் 3, கோட்டூா் 20, குடவாசல் 7 என மாவட்டம் முழுவதும் 154 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,822 ஆக உயா்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்த 154 போ், தங்கள் வீடுகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரையிலும் 13,737 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 96 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com