நன்னிலத்தில் கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள நன்னிலம் தொகுதி வேட்பாளா்களின் முகவா்கள், வாக்கு எண்ணிக்கை பணிக்குச் செல்லும் அரசு அலுவலா்களுக்கு கரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நன்னிலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபம், வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமை நன்னிலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா. பானுகோபன் தொடங்கிவைத்தாா். முகாமில், மருத்துவா்கள் தினேஷ், ஜெகஜீவன்ராம், பிரீதி, ஜெரால்ட், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் பரிசோதனை நடைபெற்றது. முகாமை, நன்னிலம் வட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான நா. காா்த்தி ஒருங்கிணைத்தாா்.