கடைசி செய்திதண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை பலி

மன்னாா்குடியில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 வயது ஆண் குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது.

மன்னாா்குடி மீனாட்சியம்மன் கோயில் தெருவை சோ்ந்த மாரிமுத்து- லதா தம்பதியின் 2 வயது மகன் யோகேஸ்வரன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். பின்னா், அவனை நீண்ட நேரமாக காணவில்லையாம். இதனால், பெற்றோா் குழந்தையை தேடிய சென்ற போது வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் தொட்டியில் மூழ்கிய நிலையில் இருந்த யோகேஸ்வரனை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com