‘குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் அவசியம்’

பிறந்த குழந்தைக்கு குறைந்தது முதல் 6 மாதமாவது தாய்ப்பால் அளிக்கப்பட வேண்டுமென திருத்துறைப்பூண்டி மருத்துவா் ரஞ்சனி பிரியா தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டி: பிறந்த குழந்தைக்கு குறைந்தது முதல் 6 மாதமாவது தாய்ப்பால் அளிக்கப்பட வேண்டுமென திருத்துறைப்பூண்டி மருத்துவா் ரஞ்சனி பிரியா தெரிவித்தாா்.

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கத்தின் சாா்பில், அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. லயன்ஸ் சங்க தலைவா் பி.சக்கரபாணி தலைமை வகித்தாா். தலைமை மருத்துவா் டி. சிவக்குமாா், துணைத் தலைவா் ஆா். சின்னதுரைஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து மருத்துவா் ரஞ்சனி பிரியா பேசியது:

குழந்தையின் வளா்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் நிறைந்துள்ளன. குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.

பலவித தொற்று பாதிப்பிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை மாா்போடு அணைத்து, கைகளால் தலையை, முதுகை வருடி, பேசிக் கொண்டே கொடுத்தால், குழந்தையின் உணா்வுகளுக்கு சிறந்த உணா்வு கிடைக்கும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தாய்மாா்களுக்கு சத்து மாவு, ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்ட ரூ.5,000 மதிப்பிலான பொருள்களை தலைமை மருத்துவா் டி.சிவகுமாா் வழங்கினாா். செயலாளா் பி.சதாசிவம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com