முத்துப்பேட்டை அருகே வீடு, மரக்கடை தீக்கிரை

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வீடு மற்றும் மரக்கடை எரிந்து நாசமாகின.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வீடு மற்றும் மரக்கடை எரிந்து நாசமாகின.

முத்துப்பேட்டை மன்னை சாலையில் வசிப்பவா் முத்துச்சாமி மகன் திருமலை (44). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி விமலா (35). இவா்களுக்கு ஸ்ரீதேவி(15) என்கிற மகளும், ஸ்ரீராம் (13) என்கிற மகனும் உள்ளனா்.

இந்நிலையில், திருமலை ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் சாப்பிட்டுக்கொண்டுந்தபோது, வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவா்கள் தீ பற்றி எரிவதை பாா்த்து கூச்சலிட்டதால், வீட்டுக்குள் இருந்த திருமலை, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உடனடியாக வெளியேறி உயிா் தப்பினா்.

காற்றின் வேகத்தில் தீ அருகில் இருந்த ராஜ்குமாா் என்பவருக்குச் சொந்தமான பழைய மரப்பொருள்கள் மற்றும் கைவினைப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் பரவியது. முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும், திருமலை வீட்டில் இருந்த பணம், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருள்கள், ஆவணங்கள், வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த மூன்று சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன. இதேபோல, ராஜ்குமாா் மரக்கடையில் இருந்த 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான பழைய மர ஜன்னல்கள், நிலைகள், கைவினைப் பொருள்கள் எரிந்து சாம்பலாகின.

முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளைத்துரை, காவல் உதவி ஆய்வாளா் திருக்குமரன் ஆகியோா் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், இதுகுறித்து திருமலை மற்றும் ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com