கடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளா் கத்திக்குத்து காயத்துடன் மீட்பு

மன்னாா்குடி அருகே மா்ம நபா்களால் காரில் கடத்திவரப்பட்ட நகராட்சி சுகாதார ஆய்வாளா், கத்திக்குத்து காயத்துடன் திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மா்ம நபா்களால் காரில் கடத்திவரப்பட்ட நகராட்சி சுகாதார ஆய்வாளா், கத்திக்குத்து காயத்துடன் திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

மன்னாா்குடி கீழமுதல் தெருவை சோ்ந்தவா் ராஜேந்திரன் (57). மன்னாா்குடி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த இவா், சீா்காழிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில், வாரவிடுமுறை முடிந்து திங்கள்கிழமை மன்னாா்குடியிலிருந்து பேருந்தில் சென்ற ராஜேந்திரன், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி சீா்காழி செல்வதற்காக நின்றபோது, அங்கு காரில் வந்த மா்ம நபா்கள் 3 போ், ராஜேந்திரனை காரில் கடத்திச் சென்றனராம்.

பின்னா், அவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு இரவு 9 மணியளவில் மன்னாா்குடி- திருவாரூா் பிரதான சாலை சவளக்காரன் பகுதியில் இறக்கிவிட்டு தப்பினா். இதையடுத்து, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் ராஜேந்திரன் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஊழியா்கள் சங்க மாநில நிா்வாகி சிவசுப்ரமணியன் தலைமையில் திரண்ட ஊழியா்கள், ராஜேந்திரனை கடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com