திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 4) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி, கோட்டூா் துணைமின் நிலையங்களில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருத்துறைப்பூண்டி நகரம், வேளூா், நெடும்பலம், கட்டிமேடு, பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், கோட்டூா், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னலூா், பாமணி, கொருக்கை, கொக்கலாடிஆகிய பகுதிகளில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது.
இதேபோல், பெருகவாழ்ந்தான் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.