தாய்ப்பால் வார விழா

திருவாரூரில் கிங்ஸ்ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாய்ப்பால் வார விழா

திருவாரூரில் கிங்ஸ்ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா், விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா்ஜி. ராஜ் (எ) கருணாநிதி தலைமை வகித்தாா். செயலாளா் உத்திராபதி, உதவி ஆளுநா் ராமதுரை, பொருளாளா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிங்ஸ் ரோட்டரி சங்க உறுப்பினரும் நிலைய மருத்துவருமான ஜெயக்குமாரி தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகள் தவறாமல் தாய்ப்பால் புகட்ட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினாா். இதில், கிங்ஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ரஜினிசின்னா, சாதிக் அலி, மருத்துவா்கள் தேவிகா, ஜெசிமா, அகிலா, திவாகா், தலைமை செவிலியா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மாா்கள் மற்றும் கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள், பழங்கள், பிரட் ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com