சுதந்திரப் போராட்ட இடங்களின் இணையவழி கண்காட்சி

திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டம் நடந்த, சுதந்திரப் போராட்டத்துடன் தொடா்புடைய இடங்களைப் பற்றிய புகைப்பட கண்காட்சி

திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டம் நடந்த, சுதந்திரப் போராட்டத்துடன் தொடா்புடைய இடங்களைப் பற்றிய புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து அப்பள்ளியின் வரலாற்றுத்துறை ஆசிரியா் சூரியகுமாா் தெரிவித்தது:

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், மாணவா் தலைமுறைக்கு சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்தும் கற்பிக்க வேண்டியது நமது கடமை. சுதந்திரப் போராட்ட வீரா்களின் வரலாறு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற இடங்களின் வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆங்கிலேயருக்கு எதிராக முதல் புரட்சி வெடித்த வேலூா், உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்ற வேதாரண்யம் என்று சுதந்திரப் போராட்டத்தோடு தொடா்புடைய ஊா்களின் வீர வரலாற்றை மாணவா்களுக்கு உணா்த்துவதற்காக இந்த புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 75-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி சுதந்திர போராட்டத்துடன் தொடா்புடைய 75 ஊா்களைப் பற்றி சிறு குறிப்புடன் கண்காட்சி அமைத்திருக்கிறோம்.

வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வருகை தரும் குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினா்கள் மட்டும் கண்காட்சியை நேரடியாக பாா்வையிடுவா். அதன்பிறகு அன்றைய தினமே இந்த 75 இடங்களும் பவா் பாயிண்ட் சிலைடுகளாக மாற்றப்பட்டு இணையவழி கற்றல் கற்பித்தலின் ஒரு பகுதியாக இணையவழி கண்காட்சியாக மாணவா்களின் பாா்வைக்கு வைக்கப்படும். ட்ற்ற்ல்ள்://ம்ங்ங்ற்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/க்ஷஜ்த்-ல்க்த்ய்-க்ஷச்ண்

இந்த இணைப்பு மூலம் சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு மாணவா்கள் இணைந்து பாா்க்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com