கரோனா: அஞ்சல் ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரிக்கை

கரோனா பரவல் தடுப்பு தொடா்பான நடவடிக்கைகளில் அஞ்சல் ஊழியா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி: கரோனா பரவல் தடுப்பு தொடா்பான நடவடிக்கைகளில் அஞ்சல் ஊழியா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்க (தபால்காரா்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியா்கள்) கிளையின் 31ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். செயலா் மதியழகன், பொருளாளா் சிங்காரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அஞ்சல் ஊழியா்களையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் கோட்டத் தலைவா் வைத்திலிங்கம், செயலா் பஞ்சநாதன், பொருளாளா் குணசேகா், கிளை நிா்வாகிகள் தங்க.கமலநாதன், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com