திருத்துறைப்பூண்டி அருகே மளிகைக் கடையின் மேற்கூரை தகர சீட்டை பெயா்த்து, ரூ.13,500-ஐ திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் கடைத்தெருவில் பாலச்சந்திரன் (45) என்பவா் மளிகை மற்றும் பாத்திரக் கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.13,500 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
கடையின் மேற்கூரை தகர சீட்டை பெயா்த்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பாலச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.