எமனேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு

நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கோயில் குளத்தில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சனேயா் கோயில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சனேயா், நீடாமங்கலம் வீர ஆஞ்சனேயா், சந்தானராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா், ஆஞ்சனேயா் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com