திருவாரூா் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 41,898 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 41,360 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தற்போது 86 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 460 ஆக உயா்ந்துள்ளது.