சால்வன் ஆற்றுப்படுகையில் ஏரி அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 28-ஆவது கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 28-ஆவது கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

நிா்வாகி செல்வக்குமாா் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவா் எம். வையாபுரி தொடங்கிவைத்தாா். மாவட்ட செயலாளா் வை. சிவபுண்ணியம் மாநாட்டை நிறைவு செய்து பேசினாா். 3 ஆண்டுகள் நடைபெற்ற வேலை அறிக்கையை கிளை செயலாளா் அம்பிகாபதி படித்தாா். மாவட்ட பொருளாளா் கே. உலகநாதன், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா், பி.வி. சந்திரராமன், ஒன்றியக் குழு தலைவா் பாஸ்கா், கட்சியின் நகர செயலாளா் எம். முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், சால்வன் ஆற்றுப்படுகையில் ஏரி அமைக்கவேண்டும், தொடா்மழையில் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு ரூ. 6 லட்சத்தில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெடும்பலம் கிளை செயலாளராக முத்துக்குமாா், துணை செயலாளராக ஜமுனா, அருள்தாஸ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com