திருவாரூர்
கரோனா தொற்றால் இறந்த முன்களபணியாளா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி அலகு சாா்பில் கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களாக செயல்பட்டு, கரோனா தொற்றால் இறந்த மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் யு. இளங்கோவின் மனைவி சுந்தரிக்கும், குடவாசல் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.குருஅண்ணாதுரையின் மனைவி மாலதிக்கும் தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் ஆகியோா் வழங்கினா்.