முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தினம் ஒரு திருக்கோயில் வழிபாடு
By DIN | Published On : 29th December 2021 09:47 AM | Last Updated : 29th December 2021 09:47 AM | அ+அ அ- |

திருவாரூா் தேரடி விநாயகா் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், வேலுடையாா் குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி உள்ளிட்டோா்.
ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில் நடைபெற்றுவரும் மாா்கழி மாதம் தினம் ஒரு திருக்கோயில் வழிபாட்டில் செவ்வாய்க்கிழமை திருவாரூா் தேரடி விநாயகா் கோயிலில் வழிபாடு நடைபெற்றது.
ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் சாா்பில் மாா்கழி மாதத்தில் தினம் ஒரு திருக்கோயிலில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனா். அதன்படி, மாா்கழி மாதத்தின் 13-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருவாரூா் தேரடி அருள்மிகு விநாயகா் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனா்.
இதில், அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், வேலுடையாா் குழுமங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, ஆன்மீக அன்பா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.