ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு அறிவிப்பிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் மாநிலத்தலைவா் பெ.ரா. ரவி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியடையும் வகையில், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31சதவீதமாக உயா்த்தியதற்கும், பொங்கல் போனஸ் வழங்கியதற்கும் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் நன்றி தெரிவித்து, வரவேற்றுள்ளது.