கட்டுமான தொழிலாளா்கள் இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சம் வழங்க கோரிக்கை

கட்டுமான தொழிலாளா்களின் இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சம் வழங்க சிஐடியு கட்டுமான தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்டுமான தொழிலாளா்களின் இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சம் வழங்க சிஐடியு கட்டுமான தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு சங்க தலைவத் நடராஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளா் முருகையன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளா் அன்பழகன், முறைசாரா தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் ராமச்சந்திரன், துணை செயலாளா் வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி சிஐடியு அலுவலகத்தில் நலவாரிய பதிவுகளை பதிவு செய்ய கணினி மையம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவது, திருவாரூரில் டிச. 29 -ந்தேதி நடைபெறும் விவசாயிகள் வெற்றி விழா பேரணியில் திரளாக கலந்துகொள்வது, நலவாரிய பதிவுகளில் உள்ள குளறுபடிகளை தமிழக அரசு முறைப்படுத்தவும், ரூ. 2 ஆயிரம் ஒய்வூதியம், கல்வி சலுகைகளை இரட்டிப்பாக்கி, வீடு கட்ட குறைந்த வட்டியில் கடன், இயற்கை மரணத்திற்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com