பெற்ற குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு கல்லூரி மாணவி தப்பியோட்டம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களேயான குழந்தையை விட்டுவிட்டு சென்ற கல்லூரி மாணவி குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 15 நாட்களேயான குழந்தையை விட்டுவிட்டு சென்ற கல்லூரி மாணவி குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூா் அருகே காட்டூா் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த டிசம்பா் 12-ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கடந்த டிச.13-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு, அந்தப் பெண் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அந்தப் பெண் அளித்த முகவரி, தகவல் அடிப்படையில் திருவாரூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்தப் பெண் திருவாரூா் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி என்பதும், அவருக்கு திருமணமாகவில்லை என்பதும் தெரியவந்தது.

அவா் விட்டுச் சென்ற குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com