ஆதிரங்கம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலா் கௌரி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து முகாமை தொடங்கி வைத்தாா். ஊராட்சி தலைவா் வீரசேகரன் அனைவரையும் வரவேற்றாா். அரசு மருத்துவமனை சித்தமருத்துவா் அனுஷியா கபசுர குடிநீா், சித்த மருந்துகள் வழங்கினாா். இதில் ஒன்றிய ஆணையா் சிவகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினா் சரஸ்வதி, கொறுக்கை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மருத்துவா் சந்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.