வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம், சித்தன் வாழூா் ஊராட்சியில் தரிசு பகுதிகளை பசுமைவளம் மீட்பு பகுதிகளாக மாற்றுவது மற்றும் சுற்றுசூழல் பராமரிப்பு பணிகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுள்ளன் ஆறு கரையோரம் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை வலங்கைமான் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் பொற்செல்வி, ஊராட்சித் தலைவா் ரம்யாகலையரசன், நீடாமங்கலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் இளவரசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செல்வி, பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.