சிறிய அளவிலான கோயில்களின் பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் பூசாரிகள் ஓய்வூதிய தோ்வுக்குழு உறுப்பினருமான பி. வாசு தலைமை வகித்தாா்.
இதில், சிறிய அளவிலான கோயில்களில் உள்ள பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும். வீடு இல்லாத பூசாரிகளுக்கு கோயில் நிலங்களில் வசிக்க வீட்டு மனை வழங்க வேண்டும். கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்துவதோடு, அதற்கான தலைவராக பூசாரியை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத் தலைவா் டி. கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா் பி. சேட்டு, துணைத் தலைவா் என். கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.