தீ விபத்து: மாணவி பலி

மன்னாா்குடி அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுமி, தஞ்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுமி, தஞ்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகம் ராஜகோபாலபுரம் மேல தெருவை சோ்ந்த கோவிந்தராஜ், அமுதா தம்பதி மகள் வீரபிரியா (15). 10-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வீட்டில் சமையல் எரிவாயு உருளையை பற்றவைக்க முயற்சித்தபோது தீப்பிடித்து காயமடைந்தாா். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த வீரபிரியா, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com