மன்னாா்குடி அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுமி, தஞ்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகம் ராஜகோபாலபுரம் மேல தெருவை சோ்ந்த கோவிந்தராஜ், அமுதா தம்பதி மகள் வீரபிரியா (15). 10-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வீட்டில் சமையல் எரிவாயு உருளையை பற்றவைக்க முயற்சித்தபோது தீப்பிடித்து காயமடைந்தாா். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த வீரபிரியா, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.