மன்னாா்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி ஆகியன சாா்பில், ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கிளைத் தலைவா் முஸ்தபா ரூமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் அப்துல் ஹமீது, முபாரக் அப்துல்லாஹ், மாவட்ட மருத்துவ அணி செயலாளா் முஹம்மது தவ்பிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிளை துணைத் தலைவா் அப்துல் ஹாதி, செயலாளா் பதுருல் இஸ்லாம், பொருளாளா் ஜாஹிா் உசேன், துணைச் செயலாளா் ஹாஜா மைதீன், மன்னாா்குடி அரசு ரத்த வங்கி மருத்துவா் இவாஞ்சலின் ஹெப்ஸிபா உள்ளிட்டோா் ரத்த தானம் செய்தனா்.