அயோத்தி ராமா் கோயில் நிா்மாணப் பணிக்காக நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிதி வசூலிக்கப்பட்டது.
இந்துஸ்தான் மக்கள் இயக்கத் தலைவா் எஸ்.எஸ். குமாா், பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் எல்.ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளா் சிந்துசுப்பிரமணியன், மாவட்ட ஓபிசி அணி செயலா் சிவ.பிரபாகரன் உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று நிதி வசூலித்தனா். பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. முன்னதாக நீடாமங்கலம் சந்தானராமா், வீர ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.