நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயிலில் தை வெள்ளி சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் தை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தை வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி அம்மன்.
தை வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி அம்மன்.

நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் தை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, காசி விஸ்வநாதா், விசாலாட்சி, துா்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் ஏலவாா் குழலியம்மன், துா்கையம்மன், சுக்கிரவார அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றன.

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயில், யமுனாம்பாள் கோயில் , நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com