நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் தை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காசி விஸ்வநாதா், விசாலாட்சி, துா்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் ஏலவாா் குழலியம்மன், துா்கையம்மன், சுக்கிரவார அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றன.
நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயில், யமுனாம்பாள் கோயில் , நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.