மன்னாா்குடி நகராட்சி பள்ளிக்கு தமிழக அரசின் விருது
By DIN | Published On : 06th February 2021 08:20 AM | Last Updated : 06th February 2021 08:20 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் உள்ள நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இதையொட்டி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. ராமன் தலைமை வகித்து, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்காக தமிழக அரசின் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள மன்னாா்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் மா. தேவி மற்றும் ஆசிரியா்களிடம் விருதை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் இரா. மணிவண்ணன், து. பாா்த்தசாரதி, உதவித் திட்ட அலுவலா் மு. பாலசுப்ரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...