மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.6) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மன்னாா்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம பெறும் மன்னாா்குடி, அசேஷம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், காணூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.