நன்னிலம்: திருவாரூா் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு, விருது பெற்ற, தென்கரை மாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு, வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நன்னிலத்தில், வட்டாரத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களின் கூட்டம், வட்டாரக் கல்வி அலுவலா் கு. சரஸ்வதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் சிறந்த மாதிரிப் பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்டு, விருது பெற்ற நன்னிலம் அருகேயுள்ள தென்கரை மாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், பள்ளிகளுக்குத் தேவையான சுற்றுச்சுவா், வகுப்பறைக் கட்டடம், கழிப்பறை, சுகாதார வசதிகள் மேம்பாடு, போன்ற தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகள் குறித்து உடனடியாக அறிக்கை தயாரித்து அனுப்ப வேண்டுமெனவும், மானிய தொகையை முறையாக செலவு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, தணிக்கையாளா் சௌந்தரராஜன், தென்கரை மாத்தூா் பள்ளி தலைமையாசிரியை கே. அபிராமி, உதவி ஆசிரியா் எஸ். நித்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.