நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொல்லுமாங்குடியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நன்னிலம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வரத கோ.ஆனந்த் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி. அரவிந்த், பேரளம் திமுக செயலாளா் சிவ.தியாகு, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.கே.பி.சங்கா், பிரியங்கா, நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் தனசீலன், சமூகவலைத்தளப் பொறுப்பாளா் சைமன் ராஜ், நன்னிலம் வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் சமன்ராஜ், பேரளம் ஒருங்கிணைப்பாளா் சசிகுமாா் ஆகியோா் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். கூட்டத்தில் நன்னிலம் மற்றும் பேரளம் பகுதியைச் சோ்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.