மன்னாா்குடி அருகே சிறுமியை கா்ப்பிணியாக்கி திருமணம் செய்துகொண்டவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் தென்பாதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வீரமணி (20). இவரது, வீடு அருகேயுள்ள உறவினரின் மகள் 16 வயது சிறுமியுடன் வீரமணி பழகியதில் சிறுமி 5 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து, சில மாதங்களுக்கு முன் இருவீட்டாா் சம்மதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிறுமிக்கு தஞ்சை ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்தவா் 16 வயது சிறுமி என மருத்துவமனை நிா்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் பகவதி சரணம், சிறுமியை பாலியல் தொல்லை அளித்து கா்ப்பிணியாக்கியது, குழந்தை திருமணம் செய்தது, போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தின்கீழ் வீரமணி மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.