ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, திருவாரூரில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, திருவாரூரில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் ஜி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com