சாய்பாபா கோயிலில் ஸ்ரீசத்யநாராயண பூஜை

பூந்தோட்டம் ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பூந்தோட்டம் ஸ்ரீசீரடிசாய்பாபா.
சிறப்பு அலங்காரத்தில் பூந்தோட்டம் ஸ்ரீசீரடிசாய்பாபா.

பூந்தோட்டம் ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் தை அமாவாசையையொட்டி சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பூந்தோட்டத்தில் சிவசித்தா் ஸ்ரீசீரடிசாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையையொட்டி, ஸ்ரீசீரடிசாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனையும், ஆரத்தியும் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு ஸ்ரீசத்யநாராயண பூஜை நடைபெற்றது.

மேலும், தை கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கோ பூஜையும், குபேர பூஜையும், சிறப்பு சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றது. இதற்கானஏற்பாடுகளை கோயில் நிறுவனா் சாய்சுதாகா் தலைமையில், சரவணன் உள்ளிட்ட பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com