பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th February 2021 03:43 AM | Last Updated : 17th February 2021 03:43 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய தொழிலாளா் சங்கத்தினா்.
திருவாரூா்: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் மனிதநேய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதால், விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மமக நகரச் செயலாளா் எம். ஹாஜா நஜ்புதீன் தலைமை வகித்தாா். மாநில தலைமை பிரதிநிதி ஏ. ஜபருல்லாஹ், தமுமுக-மமக மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான், மனிதநேய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஜே. ஹாஜா மைதீன், மமக மாநில செயற்குழு உறுப்பினா் எச். நவாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்