நீடாமங்கலம் ஒன்றிய திராவிடா் கழக முன்னாள் தலைவா் சா. பரமசிவம் (83) உடல்நலக் குறைவால் புதன்கிழமை அதிகாலை (பிப். 17) காலமானாா்.
அவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மறைந்த பரமசிவம் உடல் ராயபுரம் கிராமத்தில் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளாா். தொடா்புக்கு- 98943 86541.