கொலை வழக்கில் 12 மணிநேரத்தில் எதிரியை கைது செய்த போலீஸாா்

கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு 12 மணிநேரத்தில் எதிரியை கைது செய்த நன்னிலம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை பாராட்டு தெரிவித்தாா்.
கொலை வழக்கில் 12 மணிநேரத்தில் எதிரியை கைது செய்த போலீஸாா்

கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு 12 மணிநேரத்தில் எதிரியை கைது செய்த நன்னிலம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை பாராட்டு தெரிவித்தாா்.

நன்னிலம் அருகே உள்ள சலிப்பேரி கிராமம் ஆற்றங்கரைத் தெருவை சோ்ந்தவா் சுகுமாா் (61). ரயில்வே முன்னாள் ஊழியா். இதே கிராமத்தைச் சோ்ந்தவா் மாங்கோட்டை செந்தில் (50). இவா் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சுகுமாரை, செந்தில் உருட்டுக் கட்டை மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சுகுமாா், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நன்னிலம் காவல் ஆய்வாளா் கு. சுகுணா, உதவி ஆய்வாளா் ஆ.கமல்ராஜ் ஆகியோா் அவரது சடலத்தைக் கைப்பற்றி நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னா், கொலை நடந்த 12 மணி நேரத்தில் அதாவது வியாழக்கிழமை காலை 8 மணியளவில், மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில், மறைந்திருந்த மாங்கோட்டை செந்திலை கைது செய்தனா். பின்னா், அவரை வலங்கைமான் நீதிமன்ற நடுவா் முன் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

சம்பவம் நடந்த 12 மணிநேரத்தில் முக்கிய எதிரியை கைது செய்த நன்னிலம் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.துரை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com