திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வுத்துறை சாா்பில் மாணாக்கா் திறன் மேம்பாட்டு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பா. ராஜாராமன் தொடங்கி வைத்தாா். இதில், மனிதவள மேம்பாட்டு நிறுவன பயிற்றுநா் எஸ். சசிக்குமாா் பங்கேற்று, தலைமைப் பண்பும் பணி வாய்ப்பும் குறித்து பேசினாா். தமிழ்த்துறைத் தலைவா் செ. அஜிதா, பேராசிரியா்கள் சோ. குமரேசமூா்த்தி, சோ. கோதண்டராமன், முத்து. அருணகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ஞா. கயல்விழி செய்திருந்தாா்.